2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

லொறி விபத்தில் ஒருவர் படுகாயம்

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை - வெலிகண்டல் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஈடுபட்டு வரும் லொறியொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுண்டிக்குளம் கல்லாறு பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து வந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X