2025 ஜூலை 12, சனிக்கிழமை

வரட்சி, உணவு நெருக்கடியினை ஏற்படுத்தும்

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி, எதிர்காலத்தில் பெரும் உணவு நெருக்கடியினை ஏற்படுத்துமென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வரட்சியினை எதிர்கொள்ளுதல் அத்துடன் உணவு நெருக்கடி ஏற்பட்டு ஏற்பட இருக்கின்ற வறுமையினை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். காலநிலை நிலவரத்தின் படி, வரட்சி தொடர்ச்சியாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

வரட்சியில் இருந்து எப்படி மீள்வது என்பது தொடர்பான திட்டங்கள் வரைய வேண்டியுள்ளது. இலங்கையின் வறுமை வீதம் 6.7 ஆக இருக்கின்ற போது எமது மாவட்டத்தின் வறுமை வீதம் 12.7 ஆக காணப்படுகின்றது. போசாக்கு மட்டத்திலும் எமது மாவட்டம் மிகக்குறைந்த வீதமாகவே காணப்படுகின்றது எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .