2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வரட்சியால் ஒரு கிராமத்துக்கே குடிநீர்த் தட்டுப்பாடு

George   / 2016 மே 06 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக ஒரு கிராத்துக்கே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். 

'மாவட்டத்தின் வரட்சி காலநிலை தொடர்பாக மாவட்டச் செயலகத்தினால் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பிரதேச செயலாளர்களிடமிருந்து வரட்சி தொடர்பான பாதிப்புகளின் விவரங்களை கோரியுள்ளேன். அவ்விவரங்கள் இதுவரை மாவட்டச் செயலகத்துக்கு கிடைக்கவில்லை. எனினும் கரைதுறைபற்றின் ஒரு கிராமத்துக்கு குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X