2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் தொடர்ந்து போராட்டம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

சம்பள உயர்வுக் கோரி, வவுனியா நகரசபையில் பணிபுரியும் சிற்றூழியர்களின் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம், இன்று புதன்கிழமை (09) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

குறைந்த அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டமை, சம்பளம் சீர் செய்யப்படாமை மற்றும் பதவி வெற்றிடம் நிரப்பப்படாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் ஆகியோர், திங்கட்கிழமையிலிருந்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன்,  தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, வவுனியா நகரசபைக்கு வருகை தந்த வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவதூறாக பேசியதாகவும் தம்மை தாக்கியதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்ததுடன் இதுகுறித்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா நகரசபைக்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .