2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் அடையாள உண்ணாவிரதம்

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கோரி அடை மழைக்கு மத்தியிலும் பொது அமைப்புகளினால் அடையாள உண்ணாவிரதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த கிராம மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிதம்பரபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சிறுவர்கள் பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி உண்ணாவிரத்தை மேற்கொண்டதுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் கொடு, நல்லாட்சி அரசே கைதிகளை விடுதலை செய், அரசியல் கைதிகளை வாழ விடு, நல்லாட்சி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .