2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் மழையினால் 27 பேர் இடம்பெயர்வு

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் பெய்த அடை மழை காரணமாக இதுவரை 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என். சுரியராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியாவில் உள்ள பல குளங்கள் பெருக்கெடுத்தோடிவருவதுடன் தாழ் நிலப்பிரதேசங்கள் உட்பட குளங்களை அண்டிய பல கிராமங்கள் வெள்ள அபாயத்துக்குள்ளாகியுள்ளன.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கனகராயன்குளம், வடக்கு கிராமசேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X