Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 06 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்தி நிலையத்தினை வவுனியா தாண்டிக்குளம் விவசாயப்பண்ணையின் பயன்படுத்தப்படாத மேட்டுநிலத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் நாளை சனிக்கிழமை அமைதிப்பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ள இவ் அமைதிப்பேரணியில் பொருளாதார மத்தி நிலையத்தை தாண்டிக்குளம் பகுதியில் அமைக்கும் பட்சத்தில் விவசாயிகள், விற்பனையாளர்கள், தெற்கை சேர்ந்த விற்பனையாளர்கள் மற்றும் சந்தைவாய்ப்பின் இலகு தன்மை என்பவற்றை கருத்தில் கொண்டு அனுமதியை வழங்க வேண்டும் எனவும் மத்திய கிராமிய பொருளாதார அமைச்சு கோரியுள்ள நிபந்தனைகளின் பிரகாரம் தாண்டிக்குளம் காணியில் வழங்காத பட்சத்தில் சுமார் 2,000 மில்லியன் ரூபாய் வவுனியா மாவட்டத்தை விட்டு வெளிமாவட்டமொன்றுக்கு சென்றுவிடும் என்பதையும் முதலமைச்சர் கருத்தில் எடுக்கவேண்டும் எனவும் இப்பேரணியின்போது கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் சுமார் 35 பொது அமைப்புகளை அழைத்து நேற்று (05) வவுனியா வாடிவீட்டில் நடைபெற்றது.
இதன் பிரகாரம் பல்வேறு கருத்துக்கள் இக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டபோதிலும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர்கள் சனிக்கழமை காலை 9 மணிக்கு வவுனியா மறக்கறி மொத்த விற்பனைச்சந்தைக்கு முன்பாக இருந்து வவுனியா அரசாங்க அதிபர் பணிமனைவரை அமைதிப்பேரணியாக செல்வதெனவும் அங்கு அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் உட்பட வட மாகாணசைப அமைச்சர்கள் மற்றும் மாகாணசபையின் வவுனியா உறுப்பினர்கள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .