Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியாவில் மூவருக்கு இன்புளுவன்சா ஏ நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலையில் இன்புளுவன்சா நோய்த்தாக்கம் உள்ள நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கும் மற்றும் ஏனைய பொது மக்களுக்கும் அத்தியாவிசயமான கருத்தை தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.
அதாவது வவுனியா பொது வைத்தியசாலையில் 3 நோயாளர்கள் இன்புளுவன்சா ஏ தாக்கத்திற்கு உள்ளானதாக பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நோய் தடுப்பு பிரிவினதும் தேசிய ஆராய்ச்சி மையத்தினதும் அறிக்கைகள், இவர்கள் இன்புளுவன்சா ஏ1எச்1 என்ற வைரசின் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, நாம் இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சுக்கும் மாகாண சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம்.
அதனடிப்படையில் அவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொழும்பில் இருந்து இந் நோய் தொடர்பான இரு வைத்திய நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் இவ் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். இதனூடாக அனைத்து வைத்தியர்கள், தாதியர்கள் , ஊழியாகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள், நோய்த்தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாகக்கூடியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தேவையற்ற விதத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் பார்வையிட வருவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.
அத்துடன் சளி, காய்ச்சல், தும்மல், 7 நாட்களுக்கு மேற்பட்ட இடைவிடாத இருமல், உடற்சோர்வான அறிகுறிகள் காணப்படும் இடத்து உடன் வவுனியா வைத்தியசாலையை நாட வேண்டும். மக்கள் அதிகமுள்ள இடங்களுக்கு தேவையற்று செல்லுதல், நோயாளர் என அடையாளம் காணப்பட்டவர்களின் பொருட்கை தொடுதல், தேவையற்ற பொருட்களை தொடும் பட்சத்தில் உடன் கைகழுவுதல் மற்றும் தூய்மையை பேணுவதனூடாக இந் நோயில் இருந்து பாதுகாப்பை தேடிக்கொள்ள முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
34 minute ago
2 hours ago