Editorial / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“வாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வாக்களிக்காதிருப்பது மடைமை” என்று, வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆள்பவனை தீர்மானிக்க வேண்டியது ஆளப்படுபவனே எனவும் அவ்வாறு தீர்மானிப்பதற்கு உள்ள ஒரே ஒரு வாய்ப்பு தேர்தலே எனவும் கூறினார்.
அந்தத் தேர்தலில், உங்களிடம் உள்ள ஐனநாயக ஆயுதம் வாக்கே எனத் தெரிவித்த அவர், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி உங்களை ஆளப்போகின்றவர்களை நீங்கள் தெரிவுசெய்வதற்காக வாக்களிக்கும் நிலையத்துக்குச் செல்லாவிட்டால் அதன் கருத்து, உங்களை ஆளப்போகின்றவர்களை நீங்கள் அல்லாது வேறு ஒருவர் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப்போகின்றீர்கள் என்பதாகுமெனவும் கூறினார்.
“அதாவது, உங்கள் உரிமையை நீங்களே மறுக்கின்றீர்கள் என்பதேயாகும். ஆகவே, வாக்களிப்பு நிலையத்துக்குக் கட்டாயம் சென்று வாக்கைச் செலுத்த வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
24 Mar 2026