2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விதவைகள் மீது தாக்குதல்: சாந்தி எம்.பி கண்டனம்

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னகுளம் கிராமத்தில் சனிக்கிழமை(09) விறகு சேகரிக்கச் சென்ற நான்கு விதவை பெண்கள், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் தாக்கப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயமாகும் என  நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா இன்று (14) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அழகையா ஆண்டிச்சி (வயது 50) கந்தையா கதிராயி (வயது 46) சின்னப்பு உதயலக்சுமி (வயது 49) ராசு தனபாலசிங்கம் (வயது 50) ஆகியோரை குறித்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தாக்கிவிட்டு யாரிடமும் கூறக்கூடாதெனவும் கூறியதுடன் அவர்களிடமிருந்து விறகுகளை கொள்வனவு செய்யும் இரு ஆண்களையும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் மாங்குளம் பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளானவர்கள் சார்பில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கடந்த யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் 45,000இற்கும் அதிகமான விதவைப் பெண்கள் உருவாக்கியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான மனிதாபிமானமற்ற விதவைப் பெண்கள் மீதான தாக்குதல்களால் தனி நபர் பாதுகாப்பு என்கிற விடயம் கேள்விக்குள்ளாகியுள்ளாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X