2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தண்ணீரூற்றிலிருந்து முறிப்பு ஊடாக குமுழமுனைக்குச் செல்லும் உள்வீதியை உரிய முறையில் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் ஐம்பது வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த வீதி, மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்டதுடன், அண்மையில் குறித்த வீதி பொரல் போடப்பட்டு செப்பனிடப்பட்டது.அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக,  குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஆங்காங்கே குழிகள் காணப்பட்டு அங்கு நீர் தேங்கியும் காணப்படுவதாகவும் இதனால், அந்த வீதியூடாகப் போக்குவரத்து செய்யும் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், முறிப்பு பால்பண்ணை எனும் பகுதியில் வீதியை மூடி வெள்ள நீர் இன்றும் தேங்கிக் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பயணிகளும் பாடசாலை செல்லும் மாணவர்களும் பயணிக்கும் குறித்த வீதி இவ்வாறு போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும், இதனை தார் பாதையாக புனரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X