2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி : எண்மர் காயம்

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்,ரொமேஸ் மதுசங்க

வவுனியா, ஈரப்பெரியகுளம், கல்குண்ணாமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் எண்மர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளநொச்சியில் இருந்து மரதன்கடவல நோக்கி நெல் ஏற்றி சென்ற கன்டர் ரக வாகனமொன்று, கல்குன்னாமடு பிரதேசத்தில் சில்லில் காற்று போனமையினால் வீதியோரமாக நிறுத்தப்பட்டு பிறிதொரு வாகன உதவியுடன் சக்கரங்களை மாற்றிக்கொண்டிருந்த வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பஸ், திருத்தம் செய்துகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது, சக்கரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் பலியானதுடன் மேலும் எட்டு  பேர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X