2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சியிலிருந்தது ஸ்கந்தபுரத்துக்கு துவிச்சக்கரவண்டியில் கணவருடன் சென்றுகொண்டிருந்தபோது தவறி வீழ்ந்து படுகாயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உருத்திரபுரம், எள்ளுக்காட்டைச் சேர்ந்த பாலசிங்கம் சுந்தரி (வயது 60) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தலையில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .