2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்துக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்கால்கள், பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளமையினால் கட்டுக்கரை குளத்துக்கு அறுவியாற்று நீரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் 13 ஆம் கட்டை வாய்க்கால் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை பூபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கட்டுக்கரை குளத்துக்கு நீரை கொண்டு செல்லும் குஞ்சுக்குளம் தேக்கத்து அணைக்கட்டுக்கள், பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக குஞ்சுக்குளம் பாலமும் சேதமாகியுள்ளது.

கட்டுக்கரை குளத்தை நம்பி மன்னார் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது குறித்த அணைக்கட்டுகள் உடைந்து காணப்படுகின்றமையினால் நீரை கட்டுக்கரை குளத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணைக்கட்டுகளுக்கு மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் பொறுப்பாக உள்ள போதும் அத்திணைக்கள அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

இதனால், கட்டுக்கரை குளத்துக்கு செல்ல வேண்டிய நீர், சேதத்துக்கு உள்ளாகியுள்ள அணைக்கட்டினூடாக ஆற்று நீருடன் கலக்கின்றது. எனவே, உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு, அணைக்கட்டுகளை சீர் செய்து கட்டுக்கரை குளத்துக்கு நீரை கொண்டு சென்று  விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை தீர்த்து வைக்குமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுவதாக முருங்கன் 13ஆம் கட்டை வாய்க்கால் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை பூபாலன் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .