Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“திருகோணமலை புல்மோட்டை கடற்படை முகாமில் கணவர் இருப்பதாகவும் அவரை மீட்டுத்தருவதாகக் கூறி சிலர் தன்னிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றினர்” என இராணுவத்தில் ஒப்படைத்து காணாமற்போன மச்சயக்காளை கண்ணன் என்பவரின் மனைவி சங்கீதா சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த பெண் இவ்வாறு சாட்சியமளித்தார்.
“கணவர் 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இறுதி யுத்தத்தில் நானும், எனது கணவர் மற்றும் பிள்ளைகள் ஒன்றாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். ஒருநாள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும் சரணடையுமாறு கோரியதுக்கமைய, எனது கணவரை கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அதன் பின்னர் கணவரைக் காணவில்லை.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்களை நாடி வந்த சிலர், கணவர் திருகோணமலை புல்மோட்டை கடற்படை முகாமில் இருப்பதாகவும் அவரை விடுதலை செய்வதற்கு உதவி செய்வதாகவும் கூறி வெளிநாட்டிலுள்ள எனது சகோதரனுடன் தொடர்புகொண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டனர். இரண்டு தடவைகள் இவ்வாறு பணம் பெற்றனர். ஆனால் கணவரை மீட்டுத்தராமல் ஏமாற்றினர்.
நான் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளித்த கணவர் புல்மோட்டையில் இருப்பதாக கூறுகின்றனர். எனது கணவரை மீட்டுத்தாருங்கள்“ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago