Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
மாணவர்கள் கல்வியுடன் தொழில்கல்வியையும் கற்க வேண்டும். இதுவே புதிய கல்வி மறுசீரமைப்பில் முக்கிய அம்சமாக அமைந்திருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
வவுனியா, கோவில்குளம் இந்து கல்லூரியின் 60ஆவது ஆண்டு வைர விழா நேற்று(19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டக் கூடிய சக்தியாக வளரவேண்டும்.
இந்நேரத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அரசாங்கத்துக்கு வட,கிழக்கு மற்றும் மலையக மக்கள் அதிகமான வாக்குகளை அளித்திருக்கிறார்கள். அதன் பயனாக பிரச்சினைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், சமூகத்தின் வளர்ச்சி கல்வியில் தங்கியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் கல்வி மறுசீரமைப்பு கொள்கையை இந்த நாட்டில் கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆகவே, இந்த கல்வி மறுசீரமைப்பு கொள்கையின் ஊடாக மாணவர்கள் படிக்கும்போதே ஏதாவது ஒரு தொழிலை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாகக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக நான்கு அமைச்சர் இப்பணியில் செயற்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கின்ற சம காலத்தில் மாணவர்களின் பண்புக்கு ஏற்ப அந்த கல்வியை படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் கல்வி மறுசீரமைப்பு இருக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
35 minute ago
2 hours ago