2025 ஜூன் 30, திங்கட்கிழமை

1,196 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் 1,196 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இதுவரை 3,543 குடும்பங்களைச் சேர்ந்த 11,336 பேர் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் மீள்குடியேறியதையடுத்து, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளும் புனரமைத்துக்கொடுக்கப்பட்டன.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன்,

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 3,543 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இதில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக 2,043 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் சேதமடைந்;த 470 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவைதவிர 1,196 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டியுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த 36 குடும்பங்களுக்கான வீடுகளை புனரமைத்து கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X