Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 11 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம் பெரும் சந்தர்ப்பத்தில் மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பலம், எமது பெண்கள் அமைப்புக்களிடம் உள்ளது' என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன்கிழமை(11) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்காக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய இவ்வாறு கூறினார்.
'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெரும் சந்தர்ப்பத்தில், மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து, எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள போராடுவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது மக்கள் வருமானத்தை தோடிக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் சிலர், மதுபானத்துக்காக பணத்தை செலவு செய்கின்றனர். வருமானத்தை தேடிக்கொள்ள நினைப்பதில்லை.
இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கட்டி எழுப்ப நான் ஆசைப்படுகின்றேன்.
எனவே, பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பலமிக்க அமைப்பாக செயற்படுவது போன்று ஏனைய தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
51 minute ago
59 minute ago