2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சி பொதுச்சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு பூநகரிக் கடற்பரப்பு மீன்களும் சுண்டிக்குளம், தாளையடி பகுதி மீன்களும் நாள்தோறும் கொண்டுவரப்படுகின்றன. கொண்டுவரப்படுகின்ற மீன்கள் பனிக்கட்டியுள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் பழுதடைந்த மீன்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, மீன்கள் பழுதாகாமலிருப்பதற்கு மருந்துப்பொருட்கள் தூவப்படுவதாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றபோது மீன்கள் நல்லநிலையில் காணப்படும். ஆனால் வீடுகளுக்கு கொண்டுசென்று உணவு தயாரிப்பிலீடுபடும்போது மீன்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது தொடர்பாக பொது சுகாதாரப் பரிசோதர்களின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்டபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கு உணவு பரிசோதனை அதிகாரிகளினால் பலதடவைகள் அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X