Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'சனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட புகைப்படத்தில் காணாமற்போன எனது இரண்டு பிள்ளைகளின் ஒருவர் இருக்கின்றார். அவரைத் தேடித்தாருங்கள்' என இரண்டு பிள்ளைகளை தொலைத்துவிட்டு இருக்கும் சீதாலட்சுமி என்னும் தாயார் சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது. இதன்போதே அந்தத் தாயார் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 'எனது பிள்ளையான திருநாவுக்கரசு சண்முகராசா (வயது 18), திருநாவுக்கரசு தர்மசீலன் (வயது 17) ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டின் இறுதியில் விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர், மகன்கள் தொடர்பில் தகவல் இல்லை. இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் முகாங்களில் மகன்களைத் தேடியும் காணவில்லை.
கடந்த மார்ச் மாதம் பத்திரிகையொன்றில் சனல் -4 தொலைக்காட்சியால் போர்க்குற்ற ஆதார படங்கள் என வெளியிடப்பட்ட படத்தில், எனது மகன் சண்முகராசா உள்ளார். அவரது கைகளை கட்டி, இன்னும் சிலருடன் சேர்த்து கிடங்கு ஒன்றின் அருகில் இராணுவத்தினர் உட்கார வைத்துள்ளனர். எனது இரண்டு மகன்களும் எனக்கு வேண்டும்' என அந்தத் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago