Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 6,665 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என கமநல சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க,முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான வவுனிக் குளத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வலது கரைப்பகுதியில் 2,014 ஏக்கர் நிலப்பரப்பிலும் துணுக்காய் பிரதேசத்தில் காணப்படும் 9 நடுத்தரக்குளங்களின் கீழ் 3,473 ஏக்கர் நிலப்பரப்பிலும் 15 வரையான சிறிய குளங்களின் கீழ் 892 ஏக்கர் நிலப்பரப்;பிலும் 286 ஏக்கர் மானாவாரிப் பயிர் செய்கை நிலப்;;பரப்பிலுமாக மொத்தம் 6,665 ஏக்கர் நிலபப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,வவுனிக் குளத்தின் கீழ் 2,014 ஏக்;;கரும் மல்லாவிக்குளம், தேறாங்கண்டல் குளம், ஐயன்கன்குளம், மருதன்குளம், தென்னியங்குளம், கல்விளான்குளம், கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம், பழையமுறிகண்டிக்குளம் ஆகிய 9 நடுத்தரக் குளங்களின் கீழ் 3,473 ஏக்கரும் முருங்கன் குளம், துணுக்காய் குளம், கரம்;பைக்குளம்;, ஆலங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்;புக்குளம், பட்டங்கட்டிக்குளம், புத்துவெட்டுவான்குளம், மணல்குளம், புதுக்குளம், கீழ்க்குளம், அனுஞ்சியன்குளம், சொக்கன்குளம், குஞ்சுக்குளம், கொல்லன்குளம் ஆகிய 15 சிறிய குளங்களின் கீழ் 892 ஏக்கரிலும்; மானாவாரி நிலங்களின் கீழ் 286 ஏக்கரிலும் மேற்படி பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .