2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'பெரிய ஐயா' முன்பள்ளி திறந்து வைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வவுனியா பரண்நட்டகல்லு கிராமத்தில், பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் (ரி.ஆர்.ரி) சமுகப்பணி பிரிவினூடாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 'பெரிய ஐயா' முன்பள்ளி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனால், ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.

பரண்நட்டகல்லு கிராம சேவையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் பாரியார் அருந்ததி  சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான  ம.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ராஜேஸ்வரன், முன்னாள் கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி திரு.பேனாட், குருமன்காடு பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் சிவராசா மற்றும் பரண்நட்டகல்லு மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி பவானி, முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X