2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'வன்னி பிரதேச பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் 'அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத்திட்டத்தின் கீழ் வன்னி பிரதேசத்தில் பல பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கட்கிழமை(21) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கல்வி அமைச்சின் 'அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத்திட்டத்தினூடாக வன்னி பிரதேசத்தில் காணப்படுகின்ற 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 30 பாடசாலைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் மேற்படி திட்டத்தினூடாக 18 பாடசாலைகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் எட்டுப் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகளும் மன்னாரில் பத்து பாடசாலைகளில் ஐந்து பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பன்னிரண்டு பாடசாலைகளில் ஆறு பாடசாலைகளுமே தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

30 ஆண்டு காலப்போராட்ட காலத்தில் எமது கல்வி வளங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் என்பன அழிவடைந்த நிலையில் எமது கல்விசார் அபிவிருத்திகளை முன்னெடுப்பது கட்டாயமான பணியாக மாறியுள்ளது. இந்நிலையில், 'அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத்திட்டத்தினூடாக பரிந்துரைக்கப்பட்ட பல பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டமையானது எமது மாணவர்களுக்கான கல்வி உரிமையினை மீறும் செயலாகும்.

வன்னிப் பிரதேச கல்வி அபிவிருத்தியினை முன்னேற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அடையக்கூடிய இத்திட்டத்தினை கல்வி அமைச்சு நிராகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X