2025 ஜூன் 28, சனிக்கிழமை

5 வருடங்களுக்குள் வவுனியாவில் 10 மடங்கு நீர் வழங்கல்:ஹக்கீம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

5 வருடங்கள் ஆட்சி இடம்பெறுமாக இருந்தால், வவுனியாவில் 10 மடங்கு நீர் வழங்கல் அபிவிருத்தியை காணலாம் என நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில், சனிக்கிழமை (03)  நகரதிட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் வைத்திய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நீர்வழங்கலைப் பொறுத்தவரை,  நாட்டினுடைய முழு நீர்பாசன தேவைகளில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளோம். அதை 2020ஆம் ஆண்டு 60 சதவீதமாக உயர்த்துவதற்கான பாரிய நீர்பாசன வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிலையில், வடமாகாணத்தில் குடிநீர் வழங்கல் திட்டத்தில் 9  சதவீதம் தற்போது பூர்த்தியாகியுள்ளது. இதனை 2020ஆம் ஆண்டு 20 சதவீதமாக கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதைவிட, வவுனியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு 4 சதவீதமான பிரதேசத்தில் தான் குடிநீர் வழங்கல் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனை 2020இல் 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றோம்' என்றார்.

மேலும், 'ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், எமது நாட்டில் நீர்வழங்கலுக்கென தனியான வாவி அமைக்கப்பட்டு அதற்கான அணைக்கட்டு வேலைகள் எல்லாம் பூர்த்தியாகி பேராறு நீர்வழங்கல் திட்டம் தயாராகி வருகின்றது. இதேபோல், மல்வத்து ஓயா நீர்வழங்கல் திட்டமும் அமுல்படுத்தப்படுகின்ற போது, நாங்கள் எதிர்பார்கின்ற 40 சதவீதத்தை 2020இல் எட்டுவதற்கான நடவடிக்கைகள் முழுமை பெறும்.  முழு நாட்டுக்கும் 15 சதவீதமாக கூட்ட திட்டமிட்டுள்ள நீர்வழங்கல் திட்டம் வடமாகாணத்தைப் பொறுத்தவரை 9 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை, அதாவது இரு மடங்காகவும் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 சதவீதத்தை 40 ஆக, கிட்டத்தட்ட 10 மடங்காகவும் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சி 2020 ஆண்டு எட்டப்படும்' என்றும் அவர் கூறினார்.

இந்த ஆட்சி நாங்கள் திட்டமிட்டபடி 5 வருடங்கள் தொடருமாக இருந்தால், இந்த இலக்கை நாங்கள் அடையலாம். அதற்கான அனைத்து வேலைகளும் ஒழுங்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .