2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அரசியல் சார்பாக செயற்படுகின்றது'

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது நிலையாக செயற்பட வேண்டிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக செயற்படுகின்றமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ் விடையம் தொடர்பாக வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்,புதன்கிழமை(30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் 'எதிரிகள் துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் இணையோம்'என்ற தலைப்புடன் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் செய்தி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறித்த செய்தி முற்று முழுதாக பிழையானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த செய்தி தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு 'நாவடக்கம் வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிலையாக செயற்பட வேண்டிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தன்னிச்சையாக வவுனியா மாவட்டத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளை ஊக்கப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள  இக்கருத்தை   வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டிக்கின்றது.

எனவே, குறித்த செயற்பாடுகளை குறைத்து மக்களை ஏமாற்றாமல் அரசியல் ரீதியாக செயற்படாது உண்மைக்காவும் தேசியத்துக்காகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X