2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 06 பேருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
- எஸ்.றொசேரியன் லெம்பேட்


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் அறுவரையும்  எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தி கணகரட்னம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

கடற்படையினரால் திங்கட்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்ட  மீனவர்கள் 06  பேரையும், கடற்படையினர் கடற்றொலில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர் .

மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், இன்று  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி வினோதரன் பிரசன்னமாகியிருந்தார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X