2025 ஜூலை 23, புதன்கிழமை

இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகனதாஸிடம் 6 கிராம அபிவிருத்தி சங்கங்கள் இன்று (30) மகஜரினை கையளித்துள்ளனர்.

சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், தரணிக்குளம், மறவன்குளம், கல்மடு, பூம்புகார் கிராம அபிவிருத்தி சங்களே இம் மகஜரினை வழங்கியுள்ளனர்.
இதில் சுந்தரபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் வழங்கியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது,

'எமது கிராமம் மிகவும் வறுமைக்கு உட்பட்ட கிராமம். எமது மக்கள் 1996 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 4 வருடங்களாக வசித்த நிலையில் 2001 ஆம் ஆண்டுக்குப் பின் தற்காலிக குடியேற்றம் செய்யப்பட்டோம்.

அன்று முதல் இன்று வரை எவ்வித வீடுகளும் எமக்கு கட்டித்தரப்படவில்லை. ஆனால் அதன் பிற்பாடு எமக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூலம் புள்ளி வழங்கல் அடிப்படையில் எமது கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று (30) வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பானது எமக்கு வீடு கிடைத்துள்ளதை பறிமுதல் செய்யும் ஒன்றாகவே கருதுகின்றோம்.

எமது கிராமத்தின் தெரிவில் அமைச்சரும், அரச அதிகாரிகளும் எவ்வித செல்வாக்கினையும் செலுத்தவில்லை. அந்த தெரிவு முiறாயனதாகவே இடம்பெற்றுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம். தொடர்ந்தும் இவ்வாறான பொறுப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனில், அதற்கு எதிராக நாங்களும் வீதியில் இறங்கி நியாயத்துக்காக குரல் எழுப்ப நேரிடும்,

இந்த வீடமைப்பு திட்டத்தை எமக்கு தந்த இந்திய அரசாங்கத்துக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்'  என அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .