2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கசிப்பு,கோடா வைத்திருந்த நால்வருக்கு தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் பகுதிகளில் கசிப்பு மற்றும் கோடா வைத்திருந்த நால்வருக்கு 2,80,000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை(28) உத்தரவிட்டார்.

புதுக்காடு இராமநாதபுரம் பகுதியில் 750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை(23)யும்  வட்டக்கச்சி பகுதியில் ½ போத்தல் கசிப்பு வைத்திருந்த ஒருவரை கடந்த  திங்கட்கிழமை(24)யும்   பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை 3759 மில்லிலீற்றர் கோடா வைத்திருந்த ஒருவரை கடந்த திங்கட்கிழமையும் (24) , 45 போத்தல் கோடா வைத்திருந்த ஒருவரை கடந்த புதன்கிழமையும்(25) கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

குறித்த நபர்களை வெள்ளிக்கிழமை(28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, ½ போத்தல் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15,000 ரூபாவும், 750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15,000 ரூபாவும், 3759 மில்லிலீற்றர் கோடா வைத்திருந்தவருக்கு 1,25,000 ரூபாவும் 45 போத்தல் கோடா வைத்திருந்தவருக்கு 1,25,000 ரூபாவும் தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .