2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நந்திக்கடலில் நீரில்லை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தற்போது நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு, நந்திக்கடல் மற்றும் சிறுகடல் குளங்களை நம்பி மீன்பிடியில் ஈடுபட்ட 657 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறுகடல்கள் மற்றும் குளங்கள் என்ற அடிப்படையில், நந்திக்கடலில் 250 குடும்பங்களும், மாத்தளன் சாலைக்கடலில் 100 குடும்பங்களும், விசுவமடுக்குளத்தில் 124 குடும்பங்களும், உடையார்கட்டுக் குளத்தில் 72 குடும்பங்களும், மருதமடுக் குளத்தில் 27 குடும்பங்களும், தண்ணிமுறிப்புக் குளத்தில் 84 குடும்பங்களும் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக மேற்படி சிறுகடல் மற்றும் குளங்களின் நீர்மட்டங்கள் குறைந்து மீன்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

இதனால், மேற்படி குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X