2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சிக்கு குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் தீவிரம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 20 கிராம அலுவலர் பிரிவுகளுக்கான குடிநீர் விநியோக நீர்க்குழாய்கள் பொருத்தப்படும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

மேற்படி 20 கிராம சேவகர் பிரிவுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான குடிநீர்த் திட்டத்துக்கு 1,620 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த விநியோகத்திட்டத்தில் கீழ், கண்டாவளை பிரதேசததுக்கான தண்ணீர்த் தாங்கி பரந்தனிலும், கரைச்சி பிரதேசத்துக்கான தண்ணீர்த் தாங்கி இரத்தினபுரம் பகுதியிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மேற்படி குடிநீர் விநியோகத்தை இணைக்கும் குழாய்கள் பொருத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X