2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வங்காலை கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், நாணாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் இன்று (3) புதன்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் வங்காலை கடற்படை முகாமில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் கரை ஒதுங்கியுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை, சடலத்தை பார்வையிட்டதோடு அதை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைவாக சடலத்தை அடையாளம் காண்பதற்காக இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பாக வைத்தியசாலையில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X