2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுயதொழில், கிராம வளர்ச்சித் திட்டம் அறிமுகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


'வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம்' என்ற தொனிப்பொருளில் சுயதொழில் மேம்பாடு மற்றும் கிராம வளர்ச்சிக்கான திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு  வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (3) இடம்பெற்றது.

வவுனியா  மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக  100 கிராமங்களைச் சேர்ந்த  மக்களின் பொருளாதாரம்  மற்றும் கிராம வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிராமங்கள்  ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் அந்தந்த கிராமிய குழுக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிபாபா பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X