2025 ஜூலை 16, புதன்கிழமை

திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகர மத்தியில்; உள்ள 02 வர்த்தக நிலையங்களை உடைத்து திருடியதாகக்  கூறப்படும் 03 பேரை புதன்கிழமை (10) இரவு   கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வர்த்தக நிலையங்களை உடைத்து இவர்கள் திருட்டில் ஈடுபட்ட வேளை, இது தொடர்பில்  தங்களுக்கு  அப்பகுதியில் இருந்தவர்கள்  தகவல் வழங்கினர்.  இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்கு   பொலிஸார் விரைந்துசென்றனர். இதன்போது, இந்தச் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இந்த நிலையில், அங்கு தேடுதல் மேற்கொண்டபோது மீன்சந்தைப் பகுதியில் ஒருவரை கைதுசெய்ததைத் தொடர்ந்து,  ஏனைய 02 பேரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X