2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வியாழக்கிழமை(11) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 6 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட   30 இந்திய மீனவர்களை இன்று(11) வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின், குறித்த 30 மீனவர்களையும் இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு மீன்பிடி வலைத்தொகுதிகளையும் ஒப்படைத்தனர்.

குறித்த மீனவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், அம்மீனவர்களை இன்று மாலை 4 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X