2025 ஜூலை 16, புதன்கிழமை

சௌத்பார் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சௌத்பார் கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில், ஆடைகள் எவையும் இன்றி ஆண் ஒருவரின் சடலம் இன்று (15) காலை  கரையோதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரை ஒதுங்கிய குறித்த சடலத்தை கண்ட கடற்படையினர், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இந்த நிலையில் அங்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. சடலத்தில் எவ்வித உடைகளும் காணப்படவில்லை.
சடலத்தின்; இரண்டு கை மற்றும் இரண்டு கால்களும் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் காணப்பட்டது.

இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை, சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை அடையாளம் காண்பதற்காக வைத்தியசாலையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்;பட்ட வங்காலை கடற்கரையோரப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை காலை  மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X