2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நவரத்தினம் கபில்நாத்

இந்துசமய கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு இயங்கிவருகின்ற அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சருக்கு  வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் த.சந்திரமோகன் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்து அறநெறி ஆசிரியர்களுக்கு இதுவரையில் முறையான வேதனமோ அல்லது ஊக்குவிப்பு கொடுப்பனவோ வழங்கப்படவில்லை. வவுனியாவில் சுமார் எழுபதுக்கும்  மேற்பட்ட அறநெறி பாடசாலைகள் இயங்குகின்றன.

கலாசார சீரழிவுகள், போதைவஸ்து பாவனை உட்பட இளம் பருவத்தினர் பாதை மாறி செல்கின்ற இக்காலப்பகுதியில் அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக வளர்வதற்கும் அறநெறி  பாடசாலைக் கல்வி பெரிதும் உதவுகின்றது.

பாடசாலைக்கல்வி மட்டும் இவர்கள் நற்பண்புகளுடன்  வாழ்வதற்கு போதுமானதல்ல. ஆகவே, அறநெறி பாடசாலைகள் சீராக இயங்குவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்வதோடு, இதுவரை காலமும் சமய சமூக பணியாக கல்வி கற்பிக்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கும் வடமாகாணசபை முன்வரவேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .