2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு வைத்திருந்த பெண்களுக்கு ரூ. 25,000 தண்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (03) தீர்ப்பளித்தார்.

கசிப்பு வைத்திருந்து 50 வயதுடைய பெண்ணை கிளிநொச்சி பொலிஸார் திங்கட்கிழமை (02) கைது செய்தனர். பெண்ணிடமிருந்து 500 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அபராதம் விதித்த நீதவான், அபராதம் கட்டத்தவறின் 1 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த இளைஞன் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞனை செவ்வாய்க்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .