2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நெடுங்கேணி விபத்தில் மூவர் காயம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியின் நெடுங்கேணி சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

உழவு இயந்திரமும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உழவு இயந்திர சாரதிக்கும் கெப் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .