2025 ஜூலை 12, சனிக்கிழமை

மரம் வீழ்ந்ததால் பொதுச்சந்தை கட்டடம் சேதம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 25 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்லாறு பொதுச்சந்தை கூரையின்  மீது பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் சந்தைக் கொட்டகை சேதமடைந்துள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள கல்லாறு பொதுச்சந்தை, 45 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அருகில் இருந்த பாரிய வேப்பமரத்துக்கு தீ மூட்டப்பட்டமையால், அந்த மரம் சரிந்து சந்தையின் மீது வீழ்ந்துள்ளது.

சேதமடைந்துள்ள சந்தையை மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .