Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 20 வருடங்களாக துன்பங்களுடன் வாழும் எம்மை, காணிகளை வழங்கி குடியேற்றுங்கள் எனகோரி புதன்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த நலன்புரி நிலையத்தில் தாம் வாழும் கொட்டகைகளில், கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் தினம் தினம் போராட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்று வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசம் செய்ய முற்பட்டபோதிலும் அது பயனளிக்காத நிலையில், அரச அதிபரிடம் தாம் மகஜரை கையளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து 5 பேரை மாத்திரம் மாவட்ட செயலகத்துக்குள் செல்ல பொலிஸார் அனுமதித்த நிலையில், அவர்கள் அரசாங்க அதிபாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago