2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மடு விபத்தில் ஒருவர் மரணம்; 11 பேர் காயம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னகாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர்கள் சிலர், டிரக்டர் பெட்டியில் ஏறிகொண்டு கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு சென்றபோது, டிரக்டரின் பெட்டி கழன்று விபத்துக்குள்ளானது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்து பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 26 வயதான அருள் பிரகாசன் மரணமடைந்தார். அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரினால், டிரக்டர் சாரதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 23ஆம்திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்த ஏனைய 11 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .