2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்ற 117 பேர் கைது

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல், மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 105 பேரும், கஞ்சாவுடன்; 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார், வெள்ளிக்கிழமை(17) தெரிவித்தனர்.
 
பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளைடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா விற்பனை என்பன ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்;பாக 316 வழக்குகளும் கஞ்சா தொடர்பாக 16 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன், 2013ஆம் ஆண்டு சட்ட விரோத மதுபானம் தொடர்பாக 468  வழக்குகளும் கஞ்சா தொடர்பாக 50 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, 2014ஆம் ஆண்டு சட்டவிரோத மதுபானம் தொடர்பாக 499 வழக்குகளும்  கஞ்சா தொடர்பாக 64 வழக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .