Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்களுக்கு சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தின்; தலைவர் சாமஸ்ரீ தேசமான்ய எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வீடமைப்பு, சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பரந்தன் இராசாயன கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்;பாளர் ஷாஹிப் மொஹிதீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத், வவுனியா நகர சபை முன்னாள் உறுப்பினர் அப்துல் பாரி, முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்துறைகளில் மக்களுக்கு சேவை புரிந்த மற்றும் புரிந்துவருகின்ற பிரமுகர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
50 minute ago
3 hours ago
4 hours ago