2025 ஜூன் 30, திங்கட்கிழமை

டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தை பார்வையிட்ட ரிஷாத்

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தை வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நேற்று திங்கட்கிழமை (08) பார்வையிட்டார்.   

ஆடை உற்பத்தி நிறுவனங்களின் மூலம் இப்பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

தற்போது ஆடைத் தொழிற்சாலையின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இன்னும் சில மாதங்களில் புதியவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக டெஸ்கோ முகாமைத்துவ பணிப்பாளர் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.

இது தொடர்பில் தேவையான உதவிகளை தமது அமைச்சின் கீழ் செய்து கொடுக்க தயாராகவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் மேலும் தொழிற்பேட்டைகளை அமைப்பது தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X