2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன் 

பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்கான சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (09) கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலர் இராஜரட்ணம் செந்தூரன் வளவாளராகக் கலந்துகொண்டார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மட்டத்தில் செய்யவேண்டிய நடவடிக்கைகள், சமூகத்தில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள், பாடசாலையில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெற்றோர்கள் எவ்வாறு மாணவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்? ஆகிய விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X