2025 ஜூன் 28, சனிக்கிழமை

'வவுனியா கிராம சேவையாளர் பிரிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்'

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி நடராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,

'வவுனியா பிரதேச செயலக பிரிவில் தோணிக்கல், கூமாங்குளம், கந்தபுரம் ஆசிகுளம், சாஸ்திரிக்குளாங்குளம், சமளங்குளம், மகாறம்பைகுளம், ஈச்சங்குளம,; மரைக்காரம்பளை, ராஜேந்திரன்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வெங்கல செட்டிகுள பிரதேச செயலக பிரிவில் ஆண்டியபுளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலும் கிராமங்களின் எண்ணிக்கையும் அங்குள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதனால் அதற்கேற்ற வகையில் கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அக்கிராம மக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டும்.

இதற்கிணங்க தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் 3,983 குடும்பங்களும் 13,934 அங்கத்தவரும் காணப்படுகின்றனர். மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவில் நான்கு கிராமங்களும் 2,390 குடும்பங்களும் 8,027 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.

கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 1,583 குடும்பங்களும் 6,833 அங்கத்தவர்களும் உள்ளனர். ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் பதின்மூன்று கிராமங்களும் 1,584 குடும்பங்களும் 5,732 அங்கத்தவரும் காணப்படுகின்றனர். ஈச்சங்குளத்தில் கிராம அலுவலர் பிரிவில் எட்டு கிராமங்களும் 1,433 குடும்பங்களும் 4,716 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.

மரைக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவில் ஐந்து கிராமங்களும்1236 குடும்பங்களும் 4,369 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.சமணங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஐந்து கிராமங்களும் 1,093 குடும்பங்களும் 3,730 அங்கத்தவரும் காணப்படுகின்றனர். கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் நான்கு கிராமங்களும் 1,085 குடும்பங்களும் 3,732 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.

ராஜேந்திரன்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒன்பது கிராமங்களும்708 குடும்பங்களும் 2,749 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆறு கிராமங்களும்1168 குடும்பங்களும் 4,353 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.

இவ்வாறு அதிகமாக சனத்தொகையுடன் கிராம சேவகர்கள் பணியாற்றுகின்ற போது கிராம சேவகர்களின் பணி மக்களுக்கு சென்றடைவதும் மக்களின் தேவைகள் கிராம சேவகர்களுக்கு தெரியவருவதும் கேள்விக்குரியான விடயமாகும். இது தொடுர்பாக வட மாகாணசபையிலும் என்னால் பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டது' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .