2025 ஜூன் 28, சனிக்கிழமை

வீட்டுத்திட்ட வீடுகள் அமைக்க மணல் இல்லை

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தில் வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் வீடுகள் அமைப்பதற்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வெளியிடங்களுக்கு பெருமளவில் மணல் கொண்டு செல்வதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பாக விவரங்களை சேகரிக்குமாறு மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனால் மணல் அகழ்வதற்கான அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையால், உரிய முறைகளில் மணல் பெற்றுக்கொள்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளைக் கட்டுவதற்காக ஆற்றுப்படுக்கைகளில் அனுமதியுடன் மணல் அள்ளுவதற்கு அப்பகுதியிலுள்ள இராணுவத்தினர் அனுமதி வழங்குவதில்லை. சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துடன் தங்களுக்கு தேவையான மணலைப் பெற்றுக்கொள்ளவும் வழிசெய்யுமாறு வீடுகள் கட்டும் மக்கள் கிராம அலுவலர் ஊடாக கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .