2025 ஜூன் 28, சனிக்கிழமை

வவுனியா வீரபுரத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

Thipaan   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன், இன்று (22) திறந்து வைத்தார்.

அறிவு மைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆயிரம் இடைநிலைப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழேயே இவ் ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தே.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், மாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார், வலயக்கல்வி பணிப்பாளர் செ.அன்ரன் சோமராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .