2025 ஜூன் 28, சனிக்கிழமை

தனியார் பஸ் மோதியதில் பெண் பலி

George   / 2015 ஜூன் 24 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்திக்கு அருகில் புதன்கிழமை (24) தனியார் பஸ், எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளிள் பயணித்த பெண் ஸ்தலத்திலேயே பலியாகியதாகவும் பஸ்ஸின் சாரதி, நடத்துனரைக் கைது செய்துள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய பரந்தனைச் சேர்ந்த துரைராசா சித்தாரதேவி (வயது 23) என்பவரே பலியாகினார்.

விசுமடுவிலிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ், இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸூடன் போட்டியிட்டு ஓடி,  முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து பரந்தனிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணே விபத்தில் உயிரிழந்தார்.

சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .