2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அரசியல் தீர்வுக்கு சாமர்த்தியமான இராஜதந்திர நகர்வு தேவை: ப.சத்தியலிங்கம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 14 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

போரினால் துவண்டுபோயுள்ள மக்களுக்கான அபிவிருத்தியையும், அரசியல் தீர்;வையும் நோக்கிய சாமர்த்தியமான இராஜதந்திர நகர்வே இன்று எமக்கு தேவை என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, கணேசபுரம் பகுதியில் கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  திங்கட்கிழமை (13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரர், 'இது தேர்தல் காலம். மாகாணசபை தேர்தலில் ஒரு சின்னத்துடனும், ஜனாதிபதி தேர்தலில் வேறு சின்னத்துடனும் வந்த அரசியல்வாதிகள் சிலர், இப்போது மீண்டும் மாற்றுச் சின்னத்தில் வேறு நிறத்துடன் உங்களிடம் வருகின்றார்கள். இவர்கள் பற்றி அவதானமாக இருங்கள்' என எச்சரித்தார்.

'மாகாண சபை தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இயலுமானவரை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும் மத்திய அரசிடமிருந்து மாகாண மக்களுக்கான அபிவிருத்திக்கான வளங்களை பேரம் பேசி வாங்கிக் கொடுக்கக்கூடிய திறமையுடையவர்களை இம்முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .